ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஏற்பட்ட சனிப் பெயர்ச்சியில் சிம்ம ராசியில் சனி வந்து அமர்ந்துள்ளதால் ஆசிய கண்டத்திற்கு பெரும் சீரழிவுகள் ஏற்படும் என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறியுள்ளார்!

ஆசிய கண்டத்திற்குரிய ராசி சிம்மம். இதில் சனி அமர்ந்திருப்பதால் சீரழிவு ஏற்படுவது நிச்சயம். செவ்வாய் போர் கிரகமாகும். ராணுவம், காவல்துறை இதற்கெல்லாம் உரிய செவ்வாய் கிரகம் உக்கிரமடையும் போது உள்நாட்டுப் போர், கலகம், தீவிரவாதம் ஆகியன பெருகும்.

இதுமட்டுமின்றி, மொஹம்மது நாடுகளுக்கான கிரகம் செவ்வாய் ஆகும். முன்பு இது உக்கிரமடைந்தபோதுதான் வளைகுடா போர் நடந்தது. தற்பொழுதும் இது உக்கிரமடைந்திருப்பதால் வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் தீவிரவாத அமைப்புகள் ஒன்றிணைந்து பிரச்சனையை தீவிரப்படுத்துவார்கள்.

கம்யூனிச நாடுகளில் மக்கள் மன நிம்மதியின்றி தவிப்பார்கள். இதனால் இதுவரை இருந்த வந்த அடக்குமுறையை மீறி மக்கள் கிளர்ந்தெழுவார்கள்.

படியுங்கள் விவாதியுங்கள்…